‘சுவிற்சலாந்து வாழ் எழுத்தாளர் கல்லாறு சதீஸ், கனடா வாழ் பத்திரிகையாளர்
”உதயன்’லோகேந்திரலிங்கம், ஜேர்மனி வாழ் திரைப்பட இயக்குனர் சிபோ சிவகுமாரன் மற்றும் பிரான்ஸ் வாழ் திரைப்படத்துறை கலைஞர் நடிகர் திருமலையூரான் அசோக்குமார் அவர்கள், ஆகியோர் ‘சுயம்பு’ விருது கௌரவிக்கப்பெற்ற அழகிய மேடை……
கடந்த 17-12-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸில் இருந்து இயங்கி வரும் இதழ் தொலைக்காட்சி + வானொலி குழுமத்தின் சர்வதேச ( நம்மவர்களுக்கான ) “சுயம்பு” 2023 என்ற
விருது நான்கு நமது ஆளுமைகளுக்கு வழங்கப்பெற்றன. விழாவை சிறப்பாக செய்த ஊடக நிறுவனத்தின் இணை அதிபர்கள் அனுசா -ரூபன் தம்பதியினருக்கும் அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அன்றைய விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள்பெற்றவர்களை பரிந்துரை செய்தவர்கள் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் ஆகியோருக்கும் அன்றைய தினம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட பிரான்ஸ் தேசத்தின் மூத்த கலைஞர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்
அன்றைய நான்கு விருதாளர்களான மூத்த பத்திரிகையாளர் ‘கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகன் .லோகேந்திரலிங்கம் அவர்கள் ,எழுத்தாளர் தொழிலதிபர் கல்லாறு சதீஷ் அவர்கள், மூத்த திரைப்பட இயக்குனர் திருமலையூரான் அசோக்குமார் அவர்கள், புகலிட முதல் திரைப்பட பெண் இயக்குனர் சிபோ சிவக்குமாரன் அவர்கள், திருமலையூரான் அசோக்குமார் அவர்கள், ஆகிய நால்வரையும் மேடையில் பிரான்ஸ் தேசத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் அங்கு வாழும் தமிழ்க் கலைஞர்கள் ஆகியோர் பாராட்டிமகிழ்ந்தனர்
இதழ் TNTR ஊடகத்துக்கும் அதன் இயக்குனர்
Anu Rooban அவர்களுக்கும் அவரது கணவர் மற்றும் பிரான் வாழ் கலைஞர் பெருமக்களுக்கும் கனடா தயன் நிறுவனம் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கின்றது
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்