அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா சார்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில், ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.