ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டில்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், ஐதராபாத்தில் முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.சர்மிளா சந்தித்துப் பேசினார்.
![சந்திரபாபு நாயுடுவுடன் ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/01/ys-sharmila-met-Chandrababu-naidu.jpg)