கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மைலோடு தேவாலய பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி பங்கு பேரவை உறுப்பினராக இருந்த சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பாதிரியார் ராபின்சன் இன்று (24ம் தேதி ) காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
![போக்குவரத்து ஊழியர் கொலை: தலைமறைவான பாதிரியார் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/01/1500x900_2004097-priest2.jpg)