கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.