பஞ்சாப் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் ஆளுனர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுனருக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் ஆளுனராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித் என்பது குறிப்பிடத்தக்கது.
![பஞ்சாப் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா](https://uthayannews.ca/wp-content/uploads/2024/02/punjab-governor-banwarilal-purohit-resign.jpg)