சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய பெப்ரவரி 09/2024 வெள்ளிக்கிழமை, மாநாட்டை றிப்போட்ரஸ் கில்ட் சேப்பாக்கம், சென்னையில் நடத்த ஏற்பாடு
இதன்பின்னர் நாடுகடந்த அரசாங்கப் பிரதமருடன் தமிழ நாட்டின் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் அரசவை உறுப்பினர்கள், ஏனைய அரசவை உறுப்பினர்கள் கலந்தாலோசித்து இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதென முடி வெடுக்கப்பட்டு நாடுகடந்த அரசாங்கத்தின் தமிழக அரசவை உறுப்பினர் மதிப்புக்குரிய பாவேந்தன் வழக்கறிஞர் அவர்களால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .
* மேற்படி வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞ்ரின் அனைத்து வாதங்களையும் நீதிபதி நிராகரித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாட்டை நடாத்த அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய பெப்ரவரி 09/2024 வெள்ளிக்கிழமை மேற்படி மாநாட்டை- சிற்ப்பாக றிப்போட்ரஸ் கில்ட் சேப்பாக்கம், என்னும் விலாசத்தில் உள்ள மண்டபத்தில் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் நீதிக்கான போராடத்தின் ஓர் வெற்றிகரமான நகர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு நடைபெறும் இடம் : றிப்போட்டர்ஸ் கில்ட் , சேப்பாக்கம், சென்னை.
* காலம். : பெப்ரவரி 09,2024, (09/02/2024). வெள்ளிக்கிழமை.
* மாலை 4 மணி.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.