மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரைஇந்தியா டுடே – சி வோட்டர் சார்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன் விபரங்கள் தற்போதுவெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 39 தொகுதிகளையுமே திமுக கூட்டணிகைப்பற்றும் என அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 சதவீத வாக்குகளுடன் திமுககூட்டணி முதலிடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைக்கும்எனவும், இதர கட்சிகளுக்கு 13 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசியஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல டைம்ஸ் நவ்கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 59 சதவீத வாக்குகளை இக்கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 16 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும், பாஜக 20 சதவீதவாக்குகளுடன் ஒரு தொகுதியை கைப்பற்றலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.