காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192%, நிதியுதவி300%-ம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
வெள்ள நிவாரணம், வரிப்பங்கீடு போன்றவைகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை மத்திய அரசுவஞ்சிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி பங்கீட்டில்பாரபட்சம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நிதி ஒதுக்கீட்டில் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி, மத்திய அரசை கண்டித்துகர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. கேரளஅரசு சார்பிலும் நேற்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதிவழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பி.களும் போராட்டம்நடத்தினர்.