தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர்பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவஉபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஜி.பழனிசாமி வரவேற்று பேசினார்.
இந்நிலையில், அமைச்சர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கி பேசும்போது, “கே.எம்.சி.ஹெச்மருத்துவமனையை 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 200 படுக்கைவசதிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 2000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இந்தமருத்துவமனை விரிவடைந்துள்ளது. இதன் மூலம் கலைஞர் கருணாநிதி கைராசிக்காரர் என்பதும், அவர்தொட்டது துலங்கும் என்பதும் நிரூபணமாகியுள்ளது” என தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதயமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனஉடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில் தற்போதுகல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உட்பட 8 உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளது.