திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படம் இயக்கி சர்வதேசதிரைப்பட விழாக்களில் கவனம் பெற்றார். தனது அடுத்த திரைப்படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்காகஇமாச்சல பிரதேசம் சென்றார். அவரிடம் உதவியாளராக பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தகோபிநாத் என்பவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் லொகேஷன்பார்ப்பதற்காக வாடகை காரில் சென்றுள்ளனர். சட்லஜ் நதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் கார்சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கார் நிலைதடுமாறி சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. திங்கள் கிழமை ஓட்டுநர் டென்சினின் உடல்கண்டுபிடிக்கப்பட்டது. படுகாயங்களுடன் கோபிநாத் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
விபத்து நிகழ்ந்த 8 நாட்கள் ஆன நிலையில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில்அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.