எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில்எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கைஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பம் காரணமாகமுன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வத்தைதுணைத்தலைவராக அங்கீகரிக்க கூடாது என்றும் புதிய துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமாரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்து இருப்பதாகவும் அதிமுக கூறியது.
இது தொடர்பாக சட்டசபையில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அவைமரபுப்படி எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்கவேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம்பல்வேறு முறை அதிமுக மூத்த எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தனர். எனினும், அவையில் இருக்கைஒதுக்கும் விவகாரம் என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் அவை விதிகளின் படியே தான்செயல்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறி வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்றுஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேசவேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். எடப்பாடி பழனிசாமியும் இதேகோரிக்கையை வைத்து பேசினார். அப்போது உடனே முதல்வர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில்தலையிட்டு பேசினார். முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி, தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர் பி உதயகுமாருக்குஇடம் ஒதுக்கி தருமாறு தொடர்ந்து இந்த அவையிலே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுசபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பலமுறை அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இதே அவையில் அவைத்தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ? அதைஅடிக்கடி நீங்கள் சுட்டிக்காட்டி சொல்கிறீர்கள். எனினும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு நான்கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைப்படிஇந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிலளித்தார். எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்யமுதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில்எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கைஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் ஓ பன்னீர் செல்வத்தின்இருக்கையும் மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் என்பதால் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒருஇருக்கை ஓபன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்படலாம் என்று சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.