அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிதனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. சுவாமிநாதன் ஆணையம் வழங்கியபரிந்துரையின்படி, விவசாயிகளின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதன் மூலம் 15 கோடி விவசாய குடும்பம் பயன்பெறும் என கூறியுள்ளார். நீதியை நோக்கிய பயணத்தில் காங்கிரஸ்கட்சியின் முதல் வாக்குறுதி குறைந்தபட்ச ஆதரவு விலை என தெரிவித்துள்ளார்.