நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலானகூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தையைதொடங்கவில்லை.
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு பாமக வர வாய்ப்புள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பாஜககூட்டணியில் இல்லை என்று அதிமுக தெரிவித்துவிட்ட நிலையில், பாமக, தேமுதிக கட்சிகள் இன்னும்தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்றார். பாஜக கூட்டணிக்கு பாமக வர வாய்ப்புள்ளதாகக்கூறிய நயினார் நாகேந்திரன், பாமகவுடன் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் இறுதிமுடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.பாஜக தலைமை வாய்ப்பளித்தால் நெல்லை மக்களவைத்தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதிபடக் கூறினார். காங்கிரஸ்எம்.எல்.ஏ விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையக் கூடும் என்று தகவல்கள்வெளியான நிலையில், விஜயதாரணி அவ்வளவு எளிதாக காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டார் என்றும்நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.