அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * கனவு பட்ஜெட் கானல் நீர்… மக்களுக்கு பயன் தராது.
நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் உள்ளது. * வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. * தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு. * தமிழகத்தின் கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. * கடன் பெறுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. * வரவு- செலவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. * பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது. * மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. * இருக்கும் நிதியை வைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. இவ்வாறு அவர் கூறினார்.