காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று கூறும்போது, காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்க பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்து உள்ளனர்.
காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, இணையதளத்தின் பெரும் பகுதியையும் அழித்தனர். இந்த சுரங்கம் ஆனது, மத்திய காசாவில் அமைந்த பல்வேறு முகாம்களை ஒட்டிய துருக்கி மருத்துவமனை மற்றும் காசா நகரின் ஜெய்தவுன் பகுதியில் உள்ள இஸ்ரா பல்கலைக்கழக கட்டிடம் ஆகிய இரண்டையும் இணைக்கிறது.
சுரங்கத்திற்குள் கழிவறைகள், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் கொள்கலன் வசதிகள் மற்றும் போருக்கான உபகரணங்கள், சுரங்க நுழைவு பகுதியில் இணையதள கிளை மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் உடல்கள் ஆகியவை இருந்துள்ளன. காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் அந்த பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது. இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை கைப்பற்றி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என இஸ்ரேல் படை தெரிவித்து உள்ளது.