முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த சாந்தன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
கல்லீரல் பாதிப்பினால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘தனது தாய்நாடான இலங்கைக்கு செல்ல வேண்டும்’ என்ற சாந்தனின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.