தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – வி.சி.க. இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 எம்.பி தொகுதிகளை பெற்று திருமாவளவனும், வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் விசிக சின்னத்திலும், ரவிக்குமார் தி.மு.க சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, திமுக – விசிக இடையே இன்று மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.