தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழில் ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். சினிமா துறையில் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்-பாலோ செய்ததாகவும், அதை ஒருவர் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “ம்ம்ம்… ஐயாம் லாஸ்ட்” என்று பகிர்ந்தது ரசிர்கள் மத்தியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உறவு குறித்து பல கேள்விகள் கிளம்பியது. இதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் எழுந்த சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதத்தில் தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கதையை பதிவிட்டுள்ளார். அதில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைபடத்தை பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெகு தூரம் பயணிப்பதாகவும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.