திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 9) கையெழுத்தானது. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி கடந்த சில நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் பேச்சு நடந்து வந்தது.
இன்று மாலை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் மேலிடத்தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அண்ணா அறிவாலயம் வந்து, முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
அப்போது திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி உள்பட 10 நாடாளுமன்றத்தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என்று முடிவாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
மக்களவைத்தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டி
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவடைந்தது.
அதன்படி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-
திமுகழகம் 21
காங்கிரஸ் 10
விசிக 2
மார்க்சிஸ்ட் கம்யூ 2
இந்திய கய்யூ 2
மதிமுக 1
முஸ்லிம் லீக் 1
கொங்கு நாடு மக்கள் கட்சி 1
(கமல்ஹாசனின் மநீம மக்களவைத்தேர்தல்ல் போட்டியிடவில்லை. அதே நேரம் திமுக கூட்டணியில் இணைந்துள்ள அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது).