மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும், கன்டெய்னர் லோரியும் உரசி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மோனிஷ், கமலேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.