தேனி மாவட்டத்தை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் கோடை காலங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரால் கும்பக்கரை அருவியில் காட்டு தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் அமைத்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனப்பகுதியில் காற்று தீ பற்றாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ வைத்ததாக சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள விலை நிலங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைக்கும் பொழுது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வன பாதுகாவலர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டும் என ஏற்கனவே வனத்துறையினர் அறிவுருத்தியிருந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சின்னூர், பெரியூர் மலை கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், டீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர் 36 மணி நேரம் போராடி வனப்பகுதியில் கட்டுப்படுத்தி முற்றிலும் அனைத்தனர். இந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் காட்டு தீ பற்றி அதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமன் மற்றும் ஆண்டவர் இருவரும் பட்டா நிலத்தில் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்த போது அந்த தீப்பொறி வனப்பகுதியில் விழுந்து தீ பற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சராக வனத்துறையின் இருவர் மீதும் 1982 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கழிவு பொருட்களை தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.