தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும். டில்லியில் நிருபர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏப். 19ல் தேர்தல் நடக்கும். இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 20.03.24 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24 வேட்பு மனு பரிசீலனை- 28.03.24. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24 வேட்பு மனு பரிசீலனை- 28.03.24 வேட்பு மனு வாபஸ்- 30.03.24.. தேர்தல் தேதி- 19.04.24 ஓட்டு எண்ணிக்கை 04.06.24. விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்- ஏப்,19ம் தேதி. இவ்வாறு தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறினார்.