எனது புகைப்படத்தையோ என்னுடன் எடுத்த புகைப்படத்தையோ வேட்பாளர்கள் உள்பட யாரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். என்று பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ் சார்லி, கப்பி, மாயாநதி, லூசிபர், மின்னல் முரளி உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சுனில் குமார் டொவினோ தாமசை படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று சந்தித்தார். அதன் பிறகு அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சுனில் குமார் தனது முகநூலில் வெளியிட்டார். சிறிது நேரத்திலேயே தன்னுடைய புகைப்படத்தை வேட்பாளர் உள்பட யாரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறி டொவினோ தாமஸ் முகநூலில் ஒரு குறிப்பை வெளியிட்டார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் கேரள தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதுவராக உள்ளேன் எனவே எனது புகைப்படத்தையோ, என்னுடன் இருக்கும் புகைப்படத்தையோ, வேட்பாளர்கள் உள்பட யாரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.
இவ்வாறு அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் வெளிவந்த உடனேயே இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செந்தில்குமார் டொவினோ தாமசுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் இருந்து நீக்கிவிட்டார்.