மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதும் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், திமுக – மதிமுக மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுகவுக்கு இந்த முறை திருச்சிராப்பள்ளி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.