காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் மீதான கிரிமினல் நடவடிக்கை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜனநாயகம் என்பது பொய். இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய். இந்தியாவில் 20 சதவீத வாக்குகள் உள்ளன.
ஆனால், எதற்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். இன்று எங்களுடைய வங்கி கணக்குள் முடக்கப்படவில்லை என்றாலும் கூடு, இந்திய ஜனநாயகத்திற்கு அதிகப்படியான தொகையான கடன் சேதம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயத்தின் முடக்கம். மிகப்பெரிய எதிர்க்கட்சியான நாங்கள் என நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. நாங்கள் விளம்பரம் பதிவு செய்ய முடியவில்லை. எங்களது தலைவர்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல் இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.