தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் கடந்த 2022-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கொண்ட குழு ஆணையர்களை தேர்வு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை பிரதமர் மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்), அமித் ஷா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தவறானது.
ஆகையால் புதிய ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது. இந்த நிலையில் இந்த மனு சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க முடியாது. அப்படி தடைவிதித்தால் இந்த நிலையில் அது குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து மீது குற்றுச்சாட்டு ஏதும் இல்லை. நிர்வாகிகளின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம் என்று உங்களால் கூற முடியாது.” என நீதிபதிகள் தெரிவித்தனர்.