டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை இன்றிரவு (மார்ச் 21) கைது செய்தது
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.
சோதனை உத்தரவு பெற்றிருப்பதாகவும் மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தேடுதல் நடத்தப்படுவதாகவும் முதல்வரின் பணியாளர்களிடம் அமலாக்கத்துறை தெரிவித்தது. சுமார் இரண்டரை மணி நேரம் சோதனையும் விசாரணையும் நடத்தியபின், இன்றிரவு (மார்ச் 21) 9 மணி அளவில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
ஏற்கனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கட்டத்துறை தற்போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவாலையும் கைது செயதுள்ளது.
இதை எதிர்த்து ஆம் ஆத்மீ கடசி சார்பில் நேற்று இரவே உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.