பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதிய நீதிக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க.வின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், அரவிந்த் ரெட்டி, தமிழ்நாடு பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.