செனல்-4 புகழ் எழுத்தாளரும் ஊடகவியலாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கெலம் மெக்றே அவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு
இன்று 28ம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ள (Human Rights in The Context of Land Expropriation)
நில அபகரிப்பு சூழலில் மனித உரிமைகள் என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் திரையிடலும்.. நிகழ்வில் பல முக்கிய மனித உரிமைகள் தொடர்பான ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள். இந்த நிகழ்வில் கெலம் மெக்றே தயாரித்த ‘இலங்கைப் படுகொலைகள்’ தொடர்பான திரைப்படமானது தமிழ் உரையாடல்களுடன் திரையிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்சகது
செனல்-4 புகழ் எழுத்தாளரும் ஊடகவியலாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கெலம் மெக்றே அவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் முன்னாள் பிபிசி செய்தியாளரும் கனடா உதயன் பத்திரிகையின் தென்னாசியச் செய்தியாளருமான சிவா பரமேஸ்வரன் உட்பட பல மனித உரிமைகள் தொடர்பான ஆர்வலர்களும் உரையாற்றவுள்ளனர்.