புதிய பாதை திரைப்படத்தை மறுபதிப்பு செய்யப்போவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களை மறுபதிப்பு செய்வதும் அதன் இரண்டாம் பாகங்களை எடுப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் தங்களது ஹிட் படங்களை மறு வெளியீடு செய்து வருகின்றனர். அவ்வாறு மறு வெளியீடு செய்யப்படும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பார்த்திபன் நடிப்பில் 22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகி திரைப்படம் தற்போது மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்தின், ” நான் இயக்கி நடித்த, புதிய பாதை படத்தை மறு வெளியீடு செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 3 வருடங்கள் கழிந்து மீண்டும் நானே கதாநாயகனாக நடித்து அந்த படத்தை மறுபதிப்பு செய்யப் போகிறேன். அதற்கு டார்க்வெப் என்று பெயர் வைத்துள்ளேன். மன்ஸ் படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று கூறினார். 1989 ல் வெளிவந்த புதிய பாதை திரைப்படம் பார்த்திபன் இயக்கிய முதல் படம். இதில் வி.கே.ராமசாமி, சீதா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.