தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி 6 வது முறையாக தமிழகம் வருகை தந்துள்ளார். சென்னையில் ரோடு ஷோ நடத்தி வாக்குசேகரித்தார். கோவை மேட்டுப்பாளையம் அருகே தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி” தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது; திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். வறுமையில் இருந்த மக்களுக்கு பாஜக அரசு வீடு, மின்சாரம், ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. திமுக சுயலாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச கேட்டை விளைவித்துக் கொண்டிருக்கிறது.
யார் ஆட்சியாக இருந்தாலும் அந்த மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதை கடமையாக செய்து வருகிறது; தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. ஆனால் இன்னும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’. ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம். பாஜக அரசு இதுவரை இந்தியா முழுவதும் 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முன்வரவில்லை ” எனக் கூறியுள்ளார். பள்ளிக்கூடங்களுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. திமுக மொழியின் பெயரால் பிரித்து ஆள்கிறது. மதம் மாற்று ஜாதியின் பெயரால் பிரிவினை செய்து வருகிறது. திமுகவில் போட்டியிட 1. குடும்ப பின்னணி, 2.ஊழல், 3.தமிழ் கலாசாரத்திற்கு எதிரான மனநிலை இந்த 3ம் இருந்தால் திமுக சார்பில் போட்டியிடலாம். இதனால் மக்களே எச்சரிக்கையாக இருங்கள். சிந்தித்து வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார்.