நிதிஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அனுமனாக நடிக்க சன்னி தியோல், கும்பகர்ணனாக நடிக்க பாபி தியோல் ஆகியோரை அணுகி பேசி வருகிறார்கள். இதுபோல் ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராவணன் வேடத்தில் நடிகர் யாஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதில் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.