ஹரியானா மாநிலம் உன்ஹானி கிராமத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல பள்ளி வாகனம் காலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறது. அப்போது மஹேந்தர்கர் மாவட்டத்தில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே வந்த போது, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.