இந்த தேர்தல் எல்லா தேர்தலை விடவும் முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எல்லா தேர்தலும் முக்கியமானது தான். இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம் அதனால், எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். இந்தியா வாழ்க! தமிழ்நாட்டு ஓங்குக,, தமிழ் வெல்க!” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.