சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஆளுனர் ரவி, மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஆளுனர் ரவி, மனைவி லட்சுமி உடன் வந்து ஓட்டளித்தார். பிறகு அவர் கூறுகையில், ‛‛முதல் முறை வாக்காளர்கள், தேர்தல் திருவிழாவில் பங்கேற்று அதிகளவில் ஓட்டுப் போட வேண்டும்” என்றார்.