டெஸ்லாவின் பொதுக் கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டிற்கான துணைத் தலைவர் ரோஹல் படேல் ஏப்ரல் 15 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவர் அதன் இந்திய விரிவாக்கத் திட்டங்களின் முக்கிய குழு உறுப்பினராக இருந்தார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வருகிற 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தருவதாக அறிவித்து இருந்தார். இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளதாக எலான் மஸ்க்கும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.