ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “முன்னணி கதாநாயகன்கள் பெரும்பாலும் என்னை கண்டுகொள்வதே இல்லை. கதாநாயகிகள்தான் மதித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை கதாநாயகன்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஆனால் யாரை வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் இங்கு சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது. அறம் கதையை கேட்டதும், ஒரு குழந்தையை மீட்க இங்கே எந்தவொரு தொழில்நுட்பமுமே இல்லை என்பதை தெரிந்ததும் நயன்தாரா உடனே படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதேபோல் மனுசி கதையின் மையக்கருவை புரிந்துகொண்ட ஆண்ட்ரியாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்” என்றார்.