பிரதமர் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
”10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை இஸ்லாமியர்கள் என மோடி பேசும்போதே அவரின் திட்டம் நமக்கு தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் போதும், கர்நாடகத்தில் இருக்கும் போது மோடி இப்படி பேச மாட்டார். அங்கு இவரது பருப்பு வேகாது. ஆனால் வடமாநிலங்களில் இப்படி பேசுவார். ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி ஒரே நாடு ஒரே மொழி என பேசும் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொறு கருத்துக்களை பேசுகிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.