இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்” நிறுவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்ததுடன், தாய்லாந்து காஞ்சனபுரியில் மே 1ல் நடைபெறவிருக்கும் “நடுகல்” திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறும், தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர், முதல்-அமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு, அவர், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.