ஒலிம்பிக் ஜோதி ஒட்ட புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா, ஆந்திரா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதுமட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷொக்களிலும் மோடி பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் கோலாப்பூரில் நரேந்திர மோடி ரோட் ஷோ நடத்தியதாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வைரல் ஆனது.
அந்த புகைப்படத்தோடு, “இந்த மக்கள் கடல் கூடியது எங்கே என்று பார்க்கிறீர்களா? தெலங்கானா மாநிலம் கோலாப்பூரில், பணமோ, மதுவோ விநியோகிக்கப்படமால் பிரதமர் மோடி நடத்திய ரோட் ஷோவில் கூடிய கூட்டம் தான் இது. பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கையாலும் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் மீதான நம்பிக்கையாலும் நாட்டின் மீதான அன்பாலும் இந்த கூட்டம் கூடியுள்ளது என அந்த பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலாகி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவின் புகைப்படம் 2008 சீனாவில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஒட்டத்தின் புகைப்படம். சமீபத்திய ரோட்ஷோ அல்ல என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.
வைரலான புகைப்படத்தை வைத்து தலைகீழ் படத் தேடல் முறையை மேற்கொண்ட போது, சீனாவில் 2008 ஒலிம்பிக் தடகள ரோட்ஷோவில் இருந்து ஒரு புகைப்படம் கிடைத்தது.
மேலும், மே 9, 2008 அன்று சீனாவில் ஒலிம்பிக் பற்றி வெளியிடப்பட்ட தி அட்லாண்டிக் செய்தியில் வெளியான ஒரு புகைப்படம் தான் தற்போது தவறாக பகிரப்பட்டு வருவது தெரியவந்தது.
வைரலான புகைப்படம் குறித்த அடுத்தகட்ட விசாரணையில், சீனாவில் 2008 ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்குவதற்கு முன்பு ஏராளமான மக்கள் ரோட்ஷோவில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி, ஒலிம்பிக் சுடரை வரவேற்றனர்.
மேலும், வைரலான படத்தைப் பற்றிய விவரங்களைக் கண்டறிய கூகிள் லென்ஸின் உதவியோடும் ஆய்வு செய்யப்பட்டது.
இதன்படியும், 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் புகைப்படம் தான் பிரதமர் மோடி பங்கேற்ற ரோட் ஷோ என்று தற்போது பகிரப்பட்டு வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.