வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படப்பிடிப்பிற்காக மீண்டும் வெளிநாடு சென்றார் நடிகர் விஜய்.
லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும் அதில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக ரஷ்யாவில் இருந்து தமிழ்நாடு வந்த விஜய் தற்போது படப்பிடிற்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். துபாய் அல்லது அமெரிக்கா என இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.