நாடாளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது. அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
![3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/65.68-voter-turnout-in-3rd-phase.jpg)