மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவருடைய தாயார் மாதவ ராஜே சிந்தியா. குவாலியர் அரச குடும்பத்தின் ராஜமாதாவாக அழைக்கப்பட்ட இவர், நிமோனியாவால் அவதிப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே இன்று (மே 15) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.
மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.