வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர் ரவுடி கிளி (எ) சதீஷ் என்பது தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. இவர், பாஜக இளைஞர் அணியில் மாவட்டத்தலைவராகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.