டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, முன்னாள் குடியரசுத்தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் வீடுகளில் இருந்தே வாக்களித்தனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானியும் வீட்டில் இருந்தே வாக்களித்தார்.