தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படையின் சார்பில் ஐந்து கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் மற்றும் கடல் பகுதியில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த கப்பலில் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது, விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தால் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை நடுக்கடலில் தத்ரூபமாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படை சார்பில் மண்டல அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் குறித்தான பயிற்சி வகுப்பு நடுக்கடலில் தத்ருபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது
இதில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா,வைபவ்,ஆதேஷ்,அதுல்யா,அபிராஜ், ஆகிய 5-கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை-க்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர், மற்றும் ஒரு டோர்னியர் விமானம் ஆகியவை மூலம் நடுக்கடலில் தத்துளிப்போரை மீட்பதுமற்றும் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுதல் மற்றும் கடல் பகுதியில் கப்பலில் விபத்து தீ விபத்து ஏற்பட்டால் கப்பலில் சிக்கி இருப்பவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் கொள்ளையர்களிடம் சிக்கிய கப்பல்களை மீட்பது நடுக்கடலில் ஏதேனும் தாக்குதல் மற்றும் விபத்து ஏற்பட்டால் தடுத்தல் மற்றும் விமானாம் கடலில் விழுந்தால் மீட்பது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சி தத்துருபமாக நடுக்கடலில் நடத்திக் காண்பிக்கப்பட்டது
இந்த மண்டல அளவிலான பயிற்சி வகுப்பினை இந்திய கடலோர காவல்படை மண்டல டிஐஜி சவுகான், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மருத்துவமனை டீன் சிவக்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் என பலர் நேரில் கண்டுகளித்தனர்.