ரேமல் புயல் வங்கசேதம் அருகே கரையை கடந்த போது வங்கதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றன. இந்தியாவில் மேற்குவங்கம், அசாம், மேகாலயா, திரிபுராவில் பலத்த மழை பெய்தது. மேற்கு வங்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோல்கட்டாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘ரேமல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் அண்டை நாடான வங்க தேசம் இடையே 135 கீ.மீ வேகத்தில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசியது. கோல்கட்டாவில் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மூன்று பேர் காயமடைந்தனர். வங்தேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளில் தேசிய மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
![ரேமல் புயல்: மே.வங்கத்தில் பலத்த மழை - 10 பேர் பலி](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Romal-cyclone-Heavy-rain-10per-pali.jpg)