கவிஞர் வைரமுத்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
“வேட்டைக்காரி படத்திற்கு
நான் எழுதிய
பாடல்களை வெளியிட்டேன்;
அமைச்சர் பெரிய கருப்பன்
பெற்றுக் கொண்டார்.
உரையாற்றினேன்:
படங்கள் மெலிந்து
போனதற்குக் காரணம்
கதைச்சத்து குறைந்துபோனது.
பாடல்கள்
நலிந்துபோகக் காரணம்
பாடல்கள் உட்காரக் கதையில்
இடுப்பில்லாமல் போனது.
படத்திற்குச் செய்வது போலவே
பாடல்களின் உள்ளடக்கத்திற்கும்
திரைக்கதை செய்ய வேண்டும்.
இந்தப் படத்தில்
காடு களமாகி இருப்பதனால்
மனிதர்களையும்
விலங்குகளையும் ஒப்பிட்டு
ஒரு பாடல் எழுதி இருக்கிறேன்.
‘ஐந்து பெரிது ஆறு சிறிது’
என்ற எனது புகழ்பெற்ற
கவிதையின் சாரத்தைப்
பாட்டுக்குள் பரிமாறியிருக்கிறேன்.
அது
கவிதைக்குக் கவிதையாகும்
பாட்டுக்குப் பாட்டாகும்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.