தென் மாவட்டங்களில் உளவியல்ரீதியாக அனைத்து பொதுமக்களின் மனதிலும் சாதி உள்ளது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தற்போது ‘பைசன்’ என்ற பெயரில் விளையாட்டை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருகிறேன். இந்த திரைப்படத்தின் கதைக்களம் சில உண்மை சம்பவம் மற்றும் சில கற்பனை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும். தென் மாவட்டங்களில் உளவியல்ரீதியாக அனைத்து பொதுமக்கள் மனதிலும் சாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது.எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்” இவ்வாறு இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
![“தென்மாவட்டங்களில் சாதிப்படுகொலைகளை தடுக்க வேண்டும்” – இயக்குநர் மாரி செல்வராஜ்!](https://uthayannews.ca/wp-content/uploads/2023/06/mari-selvaraj.jpg)